திருமுறை 8.1 - திருவாசகம் - மாணிக்கவாசகர்

60 பதிகங்கள் - 705 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

காணும் அது ஒழிந்தேன் நின் திருப் பாதம்; கண்டு கண் களி கூர,
பேணும் அது ஒழிந்தேன்; பிதற்றும் அது ஒழிந்தேன்; பின்னை, எம்பெருமானே,
தாணுவே, அழிந்தேன்: நின் நினைந்து உருகும் தன்மை, என் புன்மைகளால்
காணும் அது ஒழிந்தேன்; நீ இனி வரினும், காணவும் நாணுவனே.

பொருள்

குரலிசை
காணொளி