பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 2 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
122 பதிகங்கள் - 1346 பாடல்கள் - 90 கோயில்கள்
செடி கொள் நோயின் அடையார்; திறம்பார், செறு தீவினை; கடிய கூற்றமும் கண்டு அகலும்; புகல்தான் வரும் நெடிய மாலொடு அயன் ஏத்த நின்றார், திரு வாஞ்சியத்து அடிகள், பாதம் அடைந்தார் அடியார், அடியார்கட்கே.