தரைத்தேவர் பணி சண்பை, தமிழ்க் காழி, வயம் கொச்சை,
தயங்கு பூமேல்
விரைச் சேரும் கழுமலம், மெய் உணர்ந்த(அ)யன் ஊர்,
விண்ணவர் தம் கோன் ஊர், வென்றித்
திரைச் சேரும் புனல் புகலி, வெங்குரு, செல்வம் பெருகு
தோணிபுரம், சீர்
உரை சேர் பூந்தராய், சிலம்பன் ஊர், புறவம் உலகத்தில்
உயர்ந்த ஊரே.