அக்கரம் சேர் தருமன் ஊர், புகலி, தராய், தோணிபுரம்,
அணி நீர்ப் பொய்கைப்
புக்கரம் சேர் புறவம், சீர்ச் சிலம்பன் ஊர், புகழ்க் காழி,
சண்பை, தொல் ஊர்
மிக்கர் அம் சீர்க் கழுமலமே, கொச்சை வயம், வேணுபுரம்,
அயன் ஊர், மேல் இச்
சக்கரம் சீர்த் தமிழ்விரகன் தான் சொன்ன தமிழ்
தரிப்போர் தவம் செய்தோரே.