புண்டரிகத்து ஆர் வயல் சூழ் புறவம், மிகு சிரபுரம், பூங்
காழி, சண்பை,
எண் திசையோர் இறைஞ்சிய வெங்குரு, புகலி, பூந்தராய்,
தோணிபுரம், சீர்
வண்டு அமரும் பொழில் மல்கு கழுமலம், நல் கொச்சை,
வானவர் தம் கோன் ஊர்,
அண்டு அயன் ஊர், இவை என்பர் அருங்கூற்றை
உதைத்து உகந்த அப்பன் ஊரே.