திருமுறை 2 - தேவாரம் - திருஞானசம்பந்தர்

122 பதிகங்கள் - 1346 பாடல்கள் - 90 கோயில்கள்

பதிகம்: 
பண்: காந்தாரம்

நிணம், குடர், தோல், நரம்பு, என்பு, சேர் ஆக்கைதான்
நிலாயது அன்றால்;
குணங்களார்க்கு அல்லது குற்றம் நீங்காது எனக்
குலுங்கினாயே?
வணங்குவார் வானவர் தானவர் வைகலும் மனம்கொடு
ஏத்தும்
அணங்கன் ஆரூர் தொழுது உய்யல் ஆம்; மையல்
கொண்டு அஞ்சல், நெஞ்சமே!

பொருள்

குரலிசை
காணொளி