திருமுறை 2 - தேவாரம் - திருஞானசம்பந்தர்

122 பதிகங்கள் - 1346 பாடல்கள் - 90 கோயில்கள்

பதிகம்: 
பண்: காந்தாரம்

செடி கொள் நோய் ஆக்கை அம் பாம்பின் வாய்த்
தேரைவாய்ச் சிறுபறவை
கடி கொள் பூந்தேன் சுவைத்து இன்புறல் ஆம் என்று
கருதினாயே?
முடிகளால் வானவர் முன் பணிந்து, அன்பராய் ஏத்தும்
முக்கண்
அடிகள் ஆரூர் தொழுது உய்யல் ஆம்; மையல் கொண்டு
அஞ்சல், நெஞ்சே!

பொருள்

குரலிசை
காணொளி