திருமுறை 2 - தேவாரம் - திருஞானசம்பந்தர்

122 பதிகங்கள் - 1346 பாடல்கள் - 90 கோயில்கள்

பதிகம்: 
பண்: பியந்தைக்காந்தாரம்

நடம் அது ஆடிய நாதன், நந்திதன் முழவு இடைக்
காட்டில்;
விடம் அமர்ந்து, ஒரு காலம், விரித்து அறம் உரைத்தவற்கு
ஊர் ஆம்
இடம் அதா மறை பயில்வார்; இருந்தவர், திருந்தி அம்
போதிக்
குடம் அது ஆர் மணி மாடம் குலாவிய, காழி நன்நகரே.

பொருள்

குரலிசை
காணொளி