கார் உலாவிய வார்குழலாள், கயல்கண்ணினாள், புயல் கால்
ஒளிமின் இடை,
வார் உலாவிய மென்முலையாள், மலைமாது உடன் ஆய்,
நீர் உலாவிய சென்னியன் மன்னி,நிகரும் நாமம் முந்நான்கும்
நிகழ் பதி
போர் உலாவு எயில் சூழ் பொழில் பூந்தராய்
போற்றுதுமே.