மனைகள் தொறு இடு பலி அது கொள்வர், மதி பொதி
சடையினர்
கனை கடல் அடு விடம் அமுது செய் கறை அணி மிடறினர்,
முனை கெட வரு மதில் எரி செய்த அவர், கழல் பரவுவார்
வினை கெட அருள் புரி தொழிலினர், செழு நகர் விளமரே.