கஞ்சியைக் குலவு கையரே, கலக்கம் ஆர் அமணர்கையரே,
அஞ்ச, வாதில் அருள் செய்யநீ, அணைந்திடும் பரிசு செய்ய,
நீ
வஞ்சனே! வரவும் வல்லையே, மதித்து, எனைச் சிறிதும்
வல்லையே?
வெஞ்சல் இன்றி வரு இவ் தகா மிழலை சேரும் விறல்
வித்தகா!