புற்றில் வாள் அரவும் ஆமையும் பூண்ட புனிதனார்,
பனிமலர்க்கொன்றை
பற்றி வான்மதியம் சடை இடை வைத்த படிறனார், பயின்று
இனிது இருக்கை
செற்று வன் திரைகள் ஒன்றொடு ஒன்று ஓடிச் செயிர்த்து,
வண் சங்கொடு வங்கம்
கல்-துறை வரை கொள் கரைக்கு வந்து உரைக்கும்
கழுமலநகர் எனல் ஆமே.