பெருகுவித்து என் பாவத்தை, பண்டு எலாம் குண்டர்கள் தம் சொல்லே கேட்டு
உருகுவித்து, என் உள்ளத்தினுள் இருந்த கள்ளத்தைத் தள்ளிப் போக்கி,
அருகுவித்து, பிணி காட்டி, ஆட்கொண்டு, பிணி தீர்த்த ஆரூரர் தம்
அருகு இருக்கும் விதி இன்றி,-அறம் இருக்க மறம் விலைக்குக் கொண்ட ஆறே!