திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)

113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்

பதிகம்: 
பண்: திருவிருத்தம்

பார் கொண்டு மூடிக் கடல் கொண்ட ஞான்று நின் பாதம் எல்லாம்
நால்-அஞ்சு புள் இனம் ஏந்தின என்பர்; நளிர் மதியம்
கால் கொண்ட வண்கைச் சடை விரித்து ஆடும் கழுமலவர்க்கு
ஆள் அன்றி மற்றும் உண்டோ, அம் தண் ஆழி அகலிடமே?

பொருள்

குரலிசை
காணொளி