திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)

113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்

பதிகம்: 
பண்: திருவிருத்தம்

நிலையும் பெருமையும் நீதியும் சால அழகு உடைத்து ஆய்,
அலையும் பெரு வெள்ளத்து அன்று மிதந்த இத் தோணிபுரம்,
சிலையில்-திரி புரம் மூன்றும் எரித்தார், தம் கழுமலவர்,
அலரும் கழல் அடி நாள் தொறும் நம் தமை ஆள்வனவே.

பொருள்

குரலிசை
காணொளி