பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
தருக்கிய தக்கன்தன் வேள்வி தகர்த்தன; தாமரைப்போது, உருக்கிய செம்பொன், உவமன் இலாதன; ஒண் கயிலை நெருக்கிய வாள் அரக்கன் தலைபத்தும் நெரித்து, அவன்தன் இருக்கு இயல்பு ஆயின-இன்னம்பரான்தன் இணை அடியே.