திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)

100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்

பதிகம்: 
பண்: திருக்குறுந்தொகை

திளைக்கும் வண்டொடு தேன் படு கொன்றையர்;
துளைக்கை வேழத்தர்; தோலர்; சுடர் மதி
முளைக்கும் மூரல் கதிர் கண்டு, நாகம், நா
வளைக்கும் வார்சடையார்-வன்னியூரரே.

பொருள்

குரலிசை
காணொளி