திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)

100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்

பதிகம்: 
பண்: திருக்குறுந்தொகை

துள்ளு மான்மறி, தூ மழுவாளினர்;
வெள்ள நீர் கரந்தார், சடைமேல் அவர்;-
அள்ளல் ஆர் வயல் சூழ் மணஞ்சேரி எம்
வள்ளலார்; கழல் வாழ்த்தல் வாழ்வு ஆவதே.

பொருள்

குரலிசை
காணொளி