நோதங்கம் இல்லாதார்;நாகம் பூண்டார்;நூல்
பூண்டார்;நூல் மேல் ஓர் ஆமை பூண்டார்;
பேய் தங்கு நீள் காட்டில் நட்டம் ஆடி;பிறை
சூடும் சடைமேல் ஓர் புனலும் சூடி;
ஆ தங்கு பைங்குழலாள் பாகம் கொண்டார்;அனல்
கொண்டார்;அந்திவாய் வண்ணம் கொண்டார்;
பாதம் கம் நீறு ஏற்றார்;பைங்கண் ஏற்றார்;
பலி ஏற்றார்-பந்தணைநல்லூராரே.