கடம் மன்னு களியானை உரிவை போர்த்தார்;
கானப்பேர் காதலார்; காதல்செய்து
மடம் மன்னும் அடியார் தம் மனத்தின் உள்ளார்;
மான் உரி தோல் மிசைத்தோளார்; மங்கை காண
நடம் மன்னி ஆடுவார்; நாகம் பூண்டார்;
நால்மறையோடு ஆறு அங்கம் நவின்ற நாவார்;
படம் மன்னு திருமுடியார்; பைங்கண்ஏற்றார்;
பலி ஏற்றார்-பந்தணைநல்லூராரே.