திருமுறை 6 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)

99 பதிகங்கள் - 991 பாடல்கள் - 65 கோயில்கள்

பதிகம்: 
பண்: திருத்தாண்டகம்

பாலனாய் வளர்ந்திலாப் பான்மையானே!
பணிவார்கட்கு அங்கு அங்கே பற்று ஆனானே!
நீல மாமணி கண்டத்து எண் தோளானே! நெரு
நலையாய் இன்று ஆகி நாளை ஆகும்
சீலமே! சிவலோக நெறியே ஆகும் சீர்மையே!
கூர்மையே! குணமே! நல்ல
கோலம் நீ கொள்வதற்கு முன்னோ? பின்னோ?
குளிர் ஆரூர் கோயிலாக் கொண்ட நாளே.

பொருள்

குரலிசை
காணொளி