பாதத்தால் முயலகனைப் பாதுகாத்துப் பார்
அகத்தே பரஞ்சுடர் ஆய் நின்ற நாளோ?
கீதத்தை மிகப் பாடும் அடியார்க்கு என்றும்
கேடு இலா வான் உலகம் கொடுத்த நாளோ?
பூதத்தான், பொரு நீலி, புனிதன், மேவிப் பொய்
உரையா மறை நால்வர், விண்ணோர்க்கு, என்றும்
வேதத்தை விரிப்பதற்கு முன்னோ? பின்னோ?
விழவு ஆரூர் கோயிலாக் கொண்ட நாளே.