நில்லாத நீர் சடைமேல் நிற்பித்தானை; நினையா
என் நெஞ்சை நினைவித்தானை;
கல்லாதன எல்லாம் கற்பித்தானை; காணாதன
எல்லாம் காட்டினானை;
சொல்லாதன எல்லாம் சொல்லி, என்னைத்
தொடர்ந்து, இங்கு அடியேனை ஆளாக்கொண்டு,
பொல்லா என் நோய் தீர்த்த புனிதன் தன்னை,
புண்ணியனே, பூந்துருத்திக் கண்டேன், நானே.