வெறி ஆர் மலர்க்கொன்றை சூடினானை,
வெள்ளானை வந்து இறைஞ்சும் வெண்காட்டானை,
அறியாது அடியேன் அகப்பட்டேனை, அல்லல்
கடல் நின்றும் ஏற வாங்கி
“நெறிதான் இது” என்று காட்டினானை, நிச்சல் நலி
பிணிகள் தீர்ப்பான் தன்னை,
பொறி ஆடு அரவு ஆர்த்த புனிதன் தன்னை, பொய்
இலியை, பூந்துருத்திக் கண்டேன் நானே.