எனக்கு என்றும் இனியானை, எம்மான் தன்னை,
எழில் ஆரும் ஏகம்பம் மேயான் தன்னை,
மனக்கு என்றும் வருவானை, வஞ்சர் நெஞ்சில்
நில்லானை, நின்றியூர் மேயான் தன்னை,
தனக்கு என்றும் அடியேனை ஆளாக்கொண்ட
சங்கரனை, சங்கவார் குழையான் தன்னை,
புனக் கொன்றைத்தார் அணிந்த புனிதன் தன்னை,
பொய் இலியை பூந்துருத்திக் கண்டேன், நானே.