மின் காட்டும் கொடி மருங்குல் உமையாட்கு
என்றும் விருப்பவன் காண், பொருப்பு
வலிச் சிலைக் கையோன் காண்,
நன் பாட்டுப் புலவனாய்ச் சங்கம் ஏறி நல்
கனகக்கிழி தருமிக்கு அருளினோன் காண்
பொன் காட்டக் கடிக்கொன்றை, மருங்கே நின்ற
புனக் காந்தள் கை காட்ட, கண்டு வண்டு
தென் காட்டும் செழும் புறவின்திருப் புத்தூரில்-
திருத் தளியான் காண்; அவன் என் சிந்தையானே.