திருமுறை 6 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)

99 பதிகங்கள் - 991 பாடல்கள் - 65 கோயில்கள்

பதிகம்: 
பண்: திருத்தாண்டகம்

நஞ்சு அடைந்த கண்டத்து நாதன் தன்னை,
நளிர்மலர்ப்-பூங்கணை வேளை நாசம் ஆக
வெஞ்சினத்தீ விழித்தது ஒரு நயனத்தானை,
வியன்கெடில வீரட்டம் மேவினானை,
மஞ்சு அடுத்த நீள் சோலை மாட வீதி மதில்
ஆரூர் இடம் கொண்ட மைந்தன் தன்னை,
செஞ் சினத்த திரிசூலப்படையான் தன்னை,
செங்காட்டங்குடி அதனில் கண்டேன், நானே.

பொருள்

குரலிசை
காணொளி