திருமுறை 6 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)

99 பதிகங்கள் - 991 பாடல்கள் - 65 கோயில்கள்

பதிகம்: 
பண்: திருத்தாண்டகம்

கல்லாதார் மனத்து அணுகாக் கடவுள் தன்னை;
கற்றார்கள் உற்று ஓரும் காதலானை;
பொல்லாத நெறி உகந்தார் புரங்கள் மூன்றும்
பொன்றி விழ, அன்று, பொரு சரம் தொட்டானை;
நில்லாத நிணக்குரம்பைப் பிணக்கம் நீங்க, நிறை
தவத்தை அடியேற்கு நிறைவித்து, என்றும்
செல்லாத செந்நெறிக்கே செல்விப்பானை;
செங்காட்டங்குடி அதனில் கண்டேன், நானே.

பொருள்

குரலிசை
காணொளி