திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்

136 பதிகங்கள் - 1472 பாடல்கள் - 89 கோயில்கள்

பதிகம்: 
பண்: குறிஞ்சி

வண்டு அணை கொன்றை வன்னியும் மத்தம் மருவிய கூவிளம்
எருக்கொடு மிக்க
கொண்டு அணி சடையர்; விடையினர் பூதம் கொடுகொட்டி
குடமுழாக் கூடியும், முழவப்-
பண் திகழ்வு ஆகப் பாடி, ஒர் வேதம் பயில்வர் முன் பாய்
புனல் கங்கையைச் சடைமேல்
வெண்பிறை சூடி, உமையவளோடும் வெங்குரு மேவி உள்
வீற்றிருந்தாரே.

பொருள்

குரலிசை
காணொளி