சடையினர், மேனி நீறு அது பூசி, தக்கை கொள் பொக்கணம்
இட்டு உடன் ஆகக்
கடைதொறும் வந்து, பலி அது கொண்டு, கண்டவர் மனம் அவை
கவர்ந்து, அழகு ஆகப்
படை அது ஏந்தி, பைங்கயல் கண்ணி உமையவள் பாகமும்
அமர்ந்து, அருள்செய்து,
விடையொடு பூதம் சூழ்தரச் சென்று, வெங்குரு மேவி உள்
வீற்றிருந்தாரே.