கரை பொரு கடலில் திரை அது மோத, கங்குல் வந்து ஏறிய
சங்கமும் இப்பி
உரை உடை முத்தம் மணல் இடை வைகி, ஓங்கு வான் இருள்
அறத் துரப்ப, எண்திசையும்
புரை மலி வேதம் போற்று பூசுரர்கள் புரிந்தவர் நலம் கொள்
ஆகுதியினின் நிறைந்த
விரை மலி தூபம் விசும்பினை மறைக்கும் வெங்குரு மேவி
உள் வீற்றிருந்தாரே.