திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்

136 பதிகங்கள் - 1472 பாடல்கள் - 89 கோயில்கள்

பதிகம்: 
பண்: குறிஞ்சி

புயம்பல உடைய தென் இலங்கையர் வேந்தன், பொருவரை
எடுத்தவன், பொன்முடி திண்தோள்
பயம்பல பட அடர்த்து, அருளிய பெருமான் பரிவொடும் இனிது
உறை கோயில் அது ஆகும்
வியன்பல விண்ணினும் மண்ணினும் எங்கும் வேறு வேறு உகங்களில்
பெயர் உளது என்ன,
இயம்பல படக் கடல்-திரை கரைக்கு எற்றும் கழுமலம் நினைய,
நம் வினைகரிசு அறுமே.

பொருள்

குரலிசை
காணொளி