விலங்கல் ஒன்று ஏந்தி வன்மழை தடுத்தோனும், வெறி கமழ்
தாமரையோனும், என்று இவர் தம்
பலங்களால் நேடியும் அறிவு அரிது ஆய பரிசினன் மருவி நின்று
இனிது உறைகோயில்
மலங்கி வன் திரை வரை எனப் பரந்து, எங்கும் மறிகடல் ஓங்கி,
வெள் இப்பியும் சுமந்து,
கலங்கள் தம் சரக்கொடு நிரக்க வந்து ஏறும் கழுமலம் நினைய,
நம் வினை கரிசு அறுமே.