வண்ணம் தான் சேயது அன்று; வெளிதே அன்று;
அநேகன்; ஏகன்; அணு; அணுவில் இறந்தாய்;என்று அங்கு
எண்ணம் தான் தடுமாறி, இமையோர் கூட்டம்
எய்தும் ஆறு அறியாத எந்தாய்! உன் தன்
வண்ணம் தான் அது காட்டி, வடிவு காட்டி,
மலர்க் கழல்கள் அவை காட்டி, வழிஅற்றேனை,
திண்ணம் தான் பிறவாமல் காத்து ஆட்கொண்டாய்;
எம்பெருமான்! என் சொல்லிச் சிந்திக்கேனே?
சிவ.அ.தியாகராசன்