உலவாக் காலம் தவம் எய்தி, உறுப்பும் வெறுத்து, இங்கு உனைக் காண்பான்,
பல மா முனிவர் நனி வாட, பாவியேனைப் பணி கொண்டாய்;
மல மாக் குரம்பை இது மாய்க்க மாட்டேன்; மணியே, உனைக் காண்பான்,
அலவாநிற்கும் அன்பு இலேன்; என் கொண்டு எழுகேன், எம்மானே?
சிவ.அ.தியாகராசன்