மருதங்களா மொழிவர், மங்கையோடு; வானவரும்
மால் அயனும் கூடி, தங்கள்
சுருதங்களால்-துதித்து, தூநீர் ஆட்டி, தோத்திரங்கள்
பல சொல்லி, தூபம் காட்டி,
“கருதும் கொல் எம்பிரான், செய் குற்றேவல்?”
என்பார்க்கு வேண்டும் வரம் கொடுத்து,
விகிர்தங்களா நடப்பர், வெள் ஏறு ஏறி; வெண்காடு
மேவிய விகிர்தனாரே.