திருமுறை 6 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)

99 பதிகங்கள் - 991 பாடல்கள் - 65 கோயில்கள்

பதிகம்: 
பண்: திருத்தாண்டகம்

மாக் குன்று எடுத்தோன்தன் மைந்தன் ஆகி மா
வேழம் வில்லா மதித்தான் தன்னை
நோக்கும் துணைத் தேவர் எல்லாம் நிற்க
நொடிவரையில் நோவ விழித்தான் தன்னை;
காக்கும் கடல் இலங்கைக் கோமான் தன்னைக்
கதிர் முடியும் கண்ணும் பிதுங்க ஊன்றி,
வீக்கம் தவிர்த்த விரலார்போலும் வெண்காடு
மேவிய விகிர்தனாரே.

பொருள்

குரலிசை
காணொளி