நென்னலை ஓர் ஓடு ஏத்திப் பிச்சைக்கு என்று
வந்தார்க்கு, “வந்தேன்” என்று இல்லே புக்கேன்;
அந் நிலையே நிற்கின்றார்; ஐயம் கொள்ளார்; அருகே
வருவார் போல் நோக்குகின்றார்;
“நும் நிலைமை ஏதோ? நும் ஊர்தான் ஏதோ?”
என்றேனுக்கு ஒன்று ஆகச் சொல்லமாட்டார்
மென்முலையார் கூடி விரும்பி ஆடும் வெண்காடு
மேவிய விகிர்தனாரே.