பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு
ஞானம் இலார் வேடம் பூண்டும் நரகத்தார் ஞானம் உள்ளார் வேடம் இன்று எனில் நல் முத்தர் ஞானம் உளது ஆக வேண்டுவோர் நக்கன்பால் ஞானம் உள வேடம் நண்ணி நிற்பாரே.
புன் ஞானத்தோர் வேடம் பூண்டும் பயன் இல்லை நல் ஞானத்தோர் வேடம் பூணார் அருள் நண்ணித் துன் ஞானத்தோர் சமய துரிசு உள்ளோர் பின் ஞானத்தோர் ஒன்றும் பேச கில்லாரே.
சிவ ஞானி கட்கும் சிவ யோகி கட்கும் அவம் ஆன சாதனம் ஆகாது தேரில் அவம் ஆம் அவர்க்கு அது சாதனம் நான்கும் உவமானம் இல் பொருள் உள் உறம் ஆமே.
கத்தித் திரிவர் கழுவடி நாய் போல் கொத்தித் திரிவர் குரக்களி ஞாளிகள் ஒத்துப் பொறியும் உடலும் இருக்கவே செத்துத் திரிவர் சிவஞானி யோர்களே.
அடியார் அவரே அடியார் அலா தார் அடியாரும் ஆகார் அவ் வேடமும் ஆகார் அடியார் சிவ ஞானம் ஆனது பெற்றோர் அடியார் அலாதார் அடியார்கள் அன்றே.
ஞானிக்குச் சுந்தர வேடமும் நல்ல ஆம் தான் உற்ற வேடமும் தன் சிவ யோகமே ஆன அவ்வேடம் அருள் ஞான சாதனம் ஆனது ஆம் ஒன்றும் ஆகாது அவனுக்கே.
ஞானத்தினால் பதம் நண்ணும் சிவ ஞானி தானத்தில் வைத்த தனி ஆலயத்தன் ஆம் மோனத்தின் ஆதலின் முத்தன் ஆம் சித்தன் ஆம் ஏனைத் தவசி இவன் எனல் ஆகுமே.
தான் அற்ற தன்மையும் தான் அவன் ஆதலும் ஏனைய அச் சிவம் ஆன இயற்கையும் தான் உறு சாதக முத்திரை சாத்தலும் ஏனமும் நந்தி பத முத்தி பெற்றதே.