பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு
ஆகின்ற நந்தி அடித் தாமரை பற்றிப் போகின்று உபதேசம் பூசிக்கும் பூசையும் ஆகின்ற ஆதாரம் ஆறா அதனின் மேல் போகின்ற பொற்பையும் போற்றுவன் யானே.
மேவிய ஞானத்தின் மிக்கிடின் மெய்ப் பரன் ஆவயின் ஞான நெறி நிற்றல் அர்ச்சனை ஓவற உள் பூசனை செய்யில் உத்தமம் சேவடி சேரல் செயல் அறல் தானே.
உச்சியும் காலையும் மாலையும் ஈசனை நச்சு மின் நச்சி நம என்று நாமத்தை விச்சு மின் விச்சி விரி சுடர் மூன்றினும் நச்சு மின் பேர் நந்தி நாயகன் ஆகுமே.
புண்ணிய மண்டலம் பூசை நூறு ஆகும் ஆம் பண்ணிய மேனியும் பத்து நூறு ஆகும் ஆம் எண் இலிக்கு ஐயம் இடில் கோடி ஆகும் ஆல் பண் இடில் ஞானி ஊண் பார்க்கில் விசேடமே.
இந்துவும் பானுவும் இலங்கும் தலத்து இடை வந்தித்தது எல்லாம் அசுரர்க்கு வாரி ஆம் இந்துவும் பானுவும் இலங்காத் தலத்து இடை வந்தித்தல் நந்திக்கு மா பூசை ஆமே.
இந்துவும் பானுவும் என்றே எழுகின்றது ஓர் விந்துவும் நாதமும் ஆகி ஈது ஆனத்தே சிந்தனை சாக்கிரா தீதத்தே சென்றிட்டு நந்தியைப் பூசிக்க நல்பூசை ஆமே.
மன பவனங்களை மூலத்தான் மாற்றி அனித உடல் பூதம் ஆக்கி அகற்றிப் புனிதன் அருள் தனில் புக்கு இருந்து இன்பத்து தனி உறு பூசை சதாசிவற்கு ஆமே.
பகலும் இரவும் பயில் கின்ற பூசை இயல்பு உடை ஈசர்க்கு இணை மலர் ஆகப் பகலும் இரவும் பயிலாத பூசை சகலமும் தான் கொள்வன் தாழ் சடையோனே.