பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு
தூலப் பிரணவம் சொரூப ஆனந்தப் பேர் உரை பாலித்த சூக்கும மேலைச் சொரூபப் பெண் ஆலித்த முத்திரை ஆம் அதில் காரணம் மேலைப் பிரணவம் வேத அந்த வீதியே.
ஓம் எனும் ஓங்காரத்து உள்ளே ஒருமொழி ஓம் எனும் ஓங்காரத்து உள்ளே உருவரு ஓம் எனும் ஓங்காரத்து உள்ளே பல பேதம் ஓம் எனும் ஓங்காரம் ஒண் முத்தி சித்தியே.
ஓங்காரத்து உள்ளே உதித்த ஐம் பூதங்கள் ஓங்காரத்து உள்ளே உதித்த சரா சரம் ஓங்காரா தீதத்து உயிர் மூன்றும் உற்றன ஓங்கார சீவ பர சிவ ரூபமே.
வருக்கம் சுகம் ஆம் பிரமமும் ஆகும் அருக்கம் சரா சரம் ஆகும் உலகில் தருக்கிய ஆதாரம் எல்லாம் தன் மேனி சுருக்கம் இன் ஞானம் தொகுத்து உணர்ந்தோரே.
மலையு மனோ பவம் அருள்வன ஆவன நிலையில் தரிசனம் தீப நெறி ஆம் தலமும் குலமும் தவம் சித்தம் ஆகும் நலமும் சன் மார்க்கத்து உபதேசம் தானே.
சோடச மார்க்கமும் சொல்லும் சன் மார்க்கி கட்கு ஆடிய ஈற் ஆறின் அந்தமும் ஈர் ஏழில் கூடிய அந்தமும் கோதண்டமும் கடந்து ஏறிய ஞான ஞேயாந் தத்து இருக்கவே.