பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு
அறிந்த பிரதமை யோடு ஆறும் அறிஞ்சு அறிந்த அச்சத்தம் இம் மேல் இவை குற்றம் அறிந்தவை ஒன்று விட்டு ஒன்று பத்து ஆக அறிந்து வலம் அது ஆக நடவே.
நடந்து வயிரவன் சூல கபாலி கடந்த பகைவனைக் கண் அது போக்கித் தொடர்ந்த உயிர் அது உண்ணும் பொழுது படர்ந்த உடல் கொடு பந்து ஆடல் ஆமே
ஆமே அப் பூண்ட அருள் ஆதி வயிரவன் ஆமே கபாலமும் சூலமும் கைக் கொண்டு அங்கு ஆமே தமருக பாசமும் கை அது ஆமே சிரத்தொடு வாள் அது கையே.
கை அவை ஆறும் கருத்து உற நோக்கிடும் மெய் அது செம்மை விளங்கு வயிரவன் துய்யர் உளத்தில் துளங்கு மெய் உற்றது ஆய்ப் பொய் வகை விட்டு நீ பூசனை செய்யே.
பூசனை செய்யப் பொருந்தி ஓர் ஆயிரம் பூசனை செய்ய மது உடன் ஆடும் ஆல் பூசனை சாந்து சவாது புழுகு நெய் பூசனை செய்து நீர் பூசலை வேண்டுமே.
வேண்டிய வாறு கலகமும் ஆயிடும் வேண்டிய ஆறின் நுண் மெய்யது பெற்றபின் வேண்டியவாறு வரும் வழி நீ நட வேண்டிய வாறு அது ஆகும் கருத்தே.