சடையே,
நீரகம் ததும்பி நெருப்புக்கலிக் கும்மே!
மிடறே,
நஞ்சகம் துவன்றி, அமிர்துபிலிற் றும்மே!
வடிவே,
மிளியெரி கவைஇத் தளிர்தயங் கும்மே!
அடியே,
மடங்கல்மதம் சீறி, மலர்பழிக் கும்மே!
அஃதான்று,
இனையஎன் றறிகிலம் யாமே; முனைதவத்
தலைமூன்று வகுத்த தனித்தாள்
கொலையூன்று குடுமி நெடுவே லோயே.