வண்ணம்,
அஞ்சுதலை கவைஇப் பவள மால்வரை
மஞ்சுமின் விலகிப் பகல்செகுக் கும்மே,
என்னை?
பழமுடைச் சிறுகலத்(து) இடுபலி பெய்வோள்
நெஞ்சகம் பிணிக்கும் வஞ்சமோ உடைத்தே!
அஃதான்று,
முளையெயிற்றுக் குருளை இன்துயில் எடுப்ப
நடுங்குதலைச் சிறுநிலா விதிர்க்கும் கொடும்பிறைத்(து)
ஏமுறு முதிர்சடை இறைவ
மாமுறு கொள்கை மாயமோ உடைத்தே.