பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
136 பதிகங்கள் - 1472 பாடல்கள் - 89 கோயில்கள்
நாகமும் வான்மதியும் நலம் மல்கு செஞ்சடையான், சாமம் போக நல் வில்வரையால் புரம் மூன்று எரித்து உகந்தான், தோகை நல் மாமயில் போல் வளர் சாயல்-மொழியைக் கூடப் பாகமும் வைத்து உகந்தான், உறை கோயில்-பாதாளே.