திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்

41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்

பதிகம்: 
பண்:

தாமரைநகு மகவிதழ் தகுவன
சாய்பெறுசிறு தளிரினை யனையன;

சார்தருமடி யவரிடர் தடிவன;

தாயினும்நல கருணையை யுடையன;


தூமதியினை யொருபது கொடுசெய்த
சோதியின்மிகு கதிரினை யுடையன;

தூயனதவ முனிவர்கள் தொழுவன

தோமறுகுண நிலையின; தலையின


ஓமரசினை மறைகளின் முடிவுகள்
ஓலிடுபரி சொடுதொடர் வரியன;

ஓவறுமுணர் வொடுசிவ வொளியன;

ஊறியகசி வொடுகவி செய்தபுகழ்


ஆமரசுய ரகம்நெகு மவருளன்
ஆரரசதி கையினர னருளவன்

ஆமரசுகொ ளரசெனை வழிமுழு(து)

ஆளரசுத னடியிணை மலர்களே.

பொருள்

குரலிசை
காணொளி