பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
ஆய செயல் மாண்ட அதன்பின் அயல் அவர் பால் இரப்புஅஞ்சிக் காய முயற்சியில் அரிந்த கணம் புல்லுக் கொடு வந்து, மேய விலைக்குக் கொடுத்து, விலைப் பொருளால் நெய்மாறித் தூயதிரு விளக்கு எரித்தார்; துளக்குஅறு மெய்த் தொண்டனார்.