திருமுறை 2 - தேவாரம் - திருஞானசம்பந்தர்

122 பதிகங்கள் - 1346 பாடல்கள் - 90 கோயில்கள்

பதிகம்: 
பண்: சீகாமரம்

வரி அரவே நாண் ஆக, மால்வரையே வில் ஆக.
எரிகணையால் முப்புரங்கள் எய்து உகந்த எம்பெருமான்.
பொரி சுடலை ஈமப் புறங்காட்டான், போர்த்தது ஓர்
கரிஉரியான், மேவி உறை கோயில் கைச்சினமே.

பொருள்

குரலிசை
காணொளி