வெற்று அரைச் சீவரத்தார்க்கு வெளிப்பட
நின்றிலர்போலும்;
அற்றவர், ஆல்நிழல், நால்வர்க்கு அறங்கள்
உரைத்திலர்போலும்;
உற்றவர் ஒன்று இலர்போலும்; ஓடு முடிக்கு இலர்போலும்;
பெற்றமும் ஊர்ந்திலர்போலும் பிரமபுரம் அமர்ந்தாரே.