பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 2 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
122 பதிகங்கள் - 1346 பாடல்கள் - 90 கோயில்கள்
அன்னம் அன்ன(ந்) நடைச் சாயலாளோடு, அழகு எய்தவே மின்னை அன்ன சடைக் கங்கையாள் மேவிய காரணம் தென்னன், கோழி எழில் வஞ்சியும் ஓங்கு செங்கோலினான், மன்னன் மூக்கீச்சுரத்து அடிகள் செய்கின்றது ஓர் மாயமே!